உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 12, 2010

ராமநத்தத்தில் முன்விரோத தகராறு: மூவர் கைது

ராமநத்தம் : 

                    திருமணமான பெண்ணை கடத்திய விரோதத்தில் முதியவரை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர். ராமநத்தம் அடுத்த பெரங்கியத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். சென்னையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் கீதாவுக்கு ஆலத்தூரைச் சேர்ந்த சவுந்தரராஜனை திருமணம் செய்து வைத்தார். கொளஞ்சிநாதன், குலதெய்வ கோவில் திருவிழாவிற்காக கடந்த ஏப்ரல் மாதம் மருமகன், மகள் உள்ளிட்டோருடன் பெரங்கியம் வந்தார். அப்போது கீதாவை, வீரமுத்து என்பவர் தனது உறவினர் பன்னீர்செல் வம் உதவியுடன் கடத்திச் சென்றார்.

                 இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கொளஞ்சிநாதன் உறவினர் முத்துசாமி (60) ராமநத்தம் மேம்பாலத்தின் அருகே சென்ற போது பன்னீர்செல்வம், அங்கமுத்து, அய்யாசாமி, ஆனந்தன் ஆகியோர் முத்துசாமியை தாக்கினர். இதில் முத்துசாமி பலத்த காயமடைந்தார். இதுகுறித்து முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து பன்னீர் செல்வம் (54), அங்கமுத்து (25), அய்யாசாமி (70) ஆகியோரை கைது செய்து ஆனந்தனை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior