உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 12, 2010

'கேமரா, அலாரம் இல்லாத நகை கடைகள் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்'

கடலூர் : 

                   நகைக் கடைகளில் பாதுகாப்பிற்காக அலாரம், கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளதா என போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். நகைக் கடைகளில் நடைபெறும் திருட்டை தவிர்க்க நகைக்கடை உரிமையாளர்கள் விழிப்புணர்வு கூட்டத்தை போலீசார் நடத்தினர். அதில் பாதுகாப்பு கருதி ஒவ்வொரு கடையிலும் கண் காணிப்பு கேமரா, அலாரம் ஆகியவற்றை பொறுத்த வேண்டும் என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ராமநத்தம் நகை அடகு கடையில் நகைகள் திருடு போயின. இந்த கடையில் போலீசார் அறிவுறுத்தியது போன்று கண்காணிப்பு கேமரா, அலாரம் பொறுத்தப்படவில்லை.

                   இதனைத் தொடர்ந்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகைக் கடைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் கேமரா, அலாரம் இல்லாத கடைகளில் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior