உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 12, 2010

சிதம்பரம் அருகே கோஷ்டி மோதல்: ஐந்து பேர் கைது

கிள்ளை : 

                 கந்தமங்கலத்தில் நடந்த கோஷ்டி மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் அடுத்த கந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஜெயவேல் (30). இருவருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் செல்வம், தான் கட்டிய புதிய வீட்டிற்கு கிரக பிரவேசம் நடத்துவது தொடர்பாக உறவினர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே சென்ற ஜெயவேல், தன்னைப்பார்த்து ஏளனம் செய்வதாக கூறி தட்டிக் கேட்டார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டு இரு கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். இதில் செல்வம், சுந்தரராஜ், சுந்தரமூர்த்தி, தீபா, சுகந்தி, ரவிச்சந்திரன், கனகசபை ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் 14 பேர் மீது வழக்குப் பதிந்து ரவி, ரமேஷ், ஜெயவேல் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 7 பேரை தேடிவருகின்றனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior