உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 12, 2010

லால்பேட்டை பேரூராட்சி துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

சிதம்பரம் : 

                         காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை பேரூராட்சி துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப் பட்டது. காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை பேரூராட்சி துணைத்தலைவராக இருந்தவர் காஜா மொய்தீன். இவரது நடவடிக்கை சரியில்லாததால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தலைவர் உள்ளிட்ட ஒட்டு மொத்தமாக 14 கவுன்சிலர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். 

                        அதையடுத்து நேற்று பேரூராட்சிகள் துணை இயக்குநர் சடையப்பன் முன்னிலையில் லால்பேட்டை பேரூராட்சியில் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தின்போது, பேரூராட்சி தலைவர் சபியுல்லா உள்ளிட்ட 14 கவுன் சிலர்களும் ஒட்டுமொத்தமாக துணைத்தலைவர் காஜா மொய்தீன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஆதரவு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு கலெக்டருக்கு அனுப்பப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior