உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 12, 2010

கடலூரில் அனைவருக்கும் கல்வி இயக்க விழிப்புணர்வு ஊர்வலம்

கடலூர் : 

                   கடலூரில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., மணவாள ராமானுஜம், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம், ஒருங்கிணைப் பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள். ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், தலைமை ஆசிரியர்கள், கடலூர் தொழிலாளர் ஆய்வாளர் கமலக்கண் ணன், தொழிலாளர் துறை துணை தலைமை ஆய்வாளர் தங்கராஜ், தொழிற்சாலைகள் ஆய்வாளர் ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் கடலூர் வட்டாரத்தில் உள்ள 16 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வியின் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திச்சென்றனர். முடிவில் அண்ணா விளையாட்டரங்கில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior