உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 12, 2010

கடலூரில் 19 சவரன் நகை திருட்டு

கடலூர் :

                     கடலூரில் வீட்டில் பீரோவை திறந்து 19 சவரன் நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் என்.ஜி.ஓ., நகரைச் சேர்ந்தவர் செல்வபாண்டுரங்கன். அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி ஆதிலட்சுமி விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிகிறார். இந்நிலையில் நேற்று மாலை பணி முடித்து வந்த ஆதிலட்சுமி வீட்டில் பீரோ திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பீரோவை பார்த்தபோது அதில் இருந்த 15 சவரன் தங்க காசு, 4 சவரன் செயின் ஆகியவை திருடு போயிருந்தது. இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி., மகேஷ் வரன், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior