உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 12, 2010

குள்ளஞ்சாவடியில் நகைக்கடை உள்ளிட்டமூன்று கடைகளில் ரூ.3.5 லட்சம் திருட்டு

குறிஞ்சிப்பாடி :

                    குள்ளஞ்சாவடியில் நகைக்கடை உட்பட 3 கடைகளின் பூட்டை உடைத்து 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குள்ளஞ்சாவடி அடுத்த தோப்புக்கொல்லையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவர் குள்ளஞ்சாவடி கடை வீதியில் நகை கடை வைத்துள்ளார். நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடைக்கு வந்த போது பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது 25 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் 25 ஆயிரம் ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது. அதே பகுதியில் உள்ள சிவக்குமார் ஜெனரல் ஸ்டோர் என்ற கடையின் பூட்டை உடைத்து 20 ஆயிரம் ரூபாயும், அதன் அருகே இருந்த பாலாஜி மருந்து கடையில் 1,500 ரூபாயும் திருடு போயுள்ளது.

                     மூன்று கடைகளிலும் திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 3.5 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.தகவலறிந்த நெய்வேலி டி.எஸ்.பி., மணி, குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior