உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 12, 2010

விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு: பெரும் சேதம் தவிர்ப்பு


விழுப்புரம்:
 
                சித்தனி அருகே ரயில் தண்டவாளத்தை மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்துத் தகர்த்திருக்கின்றனர். எனினும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் சித்தனி அருகே வந்தபோது பெரும் சப்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது தண்டவாளம் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது தெரியவந்தது.
 
                  இதையடுத்து அந்த வழியாகச் செல்ல இருந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் சாலை வழியாகப் போக்குவரத்தைத் தொடங்கினர். ரயில்வே அதிகாரிகளும், போலீஸாரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். முதல்கட்ட ஆய்வின்படி, அருகிலிருக்கும் மின் கம்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து குண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் எனத் தெரியவந்திருக்கிறது. இன்று காலையில் தண்டவாளம் சரி செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கியது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior