உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் ஜூலை 18-ம் தேதி பள்ளி வாகனங்கள் தணிக்கை

சிதம்பரம்:

           சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள கல்லூரி, பள்ளி வாகனங்கள் ஜூலை 18-ம் தேதி சிதம்பரத்தில் அதிகாரிகளால் தணிக்கை செய்யப்படவுள்ளது. 

               பள்ளி வாகனங்களின் தகுதி குறித்து தணிக்கை செய்து அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், ஜூலை 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் அண்ணாமலைநகர் ஐயப்பன்கோயில் அருகே உள்ள சாலையில் போக்குவரத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறை  அதிகாரிகளால் நேரடி தணிக்கை செய்யப்படவுள்ளது.எனவே பள்ளி வாகனங்களின் அனுமதிச் சீட்டு, பதிவு சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகிய பதிவுகளுடன் வாகனத்துடன் ஆய்வில் பங்கேற்க வேண்டும் என சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜி.ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior