உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

கடலூரில் உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு போட்டிகள்

கடலூர் : 

             உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி செஞ்சுருள் சங்கம் சார்பில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப் பட்டது.

              உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி மாவட்டசெஞ்சுருள் சங்கம் சார்பில் கடலூர் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஓவியம், தனி நடிப்பு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதன் பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரட்சகர் தலைமை தாங்கினார். செஞ்சுருள் சங்க அலுவலர் ஜான்தாமஸ் வரவேற்றார். கடலூர் அரசு தலைமை மருத்துவமனை காசநோய் பிரிவு இணை இயக்குனர் மனோகரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் கதிரவன், கணிதத்துறை தலைவர் ஜான் ஆரோக்கியராஜ், சென்ட்ரல் ரோட்டரி சங்க உறுப்பினர் சண்முகம் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior