உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

கடலூர் அருகே திருமணம் நிச்சயித்த வாலிபர் அரசு பஸ் மோதி பலி

கடலூர் : 
      
            கடலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் அரசு பஸ் மோதி இறந்தார். 

                கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் காளிதாஸ் (25). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், காளிதாஸ் நேற்று காலை புதுச்சேரி சென்று புதிய மோட்டார் பைக் வாங்கிக் கொண்டு, மாலை வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.இரவு 7.30 மணி அளவில் கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் அருகே சென்றபோது, பின்னால் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்ற புதுச்சேரி அரசு பஸ் மோதியது. அதில் படுகாயமடைந்த காளிதாஸ் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக் கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior