உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

கடலூரில் காமராஜர் பிறந்த நாள் விழா அமைச்சர் மாலை அணிவிப்பு

கடலூர் : 

             காமராஜரின் 108வது பிறந்த நாளையொட்டி கடலூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார்.

               காமராஜரின் 108வது பிறந்த நாளையொட்டி மாவட்ட தி.மு.க., சார்பில் கடலூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார். எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு உட்பட பலர் உடனிருந்தனர். காங்., சார்பில் இளைஞர் காங்., முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் சந்திரசேகரன் தலைமையில் லோக்சபா செயலாளர் தமிழ்செல்வி, தங்கவேலு, வினோத் சீனிவாசன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட செயலாள் சேகர், ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

                காங்., கட்சியின் சிதம்பரம் அணி சார்பில் எம்.பி.,யின் செய்தி தொடர்பாளர் குமார் தலைமையில் ராகுல் பேரவை மாநிலத் தலைவர் சிவக்குமார், இளைஞர் காங்.,தலைவர் ராமராஜ், மாவட்ட செயலாளர் சரவணன், முருகன் காமராஜர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தனர். கடலூர் நகர காங்., சார்பில் நகர தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் இளைஞர் காங்., துணைத் தலைவர் ஞானம், பத்மநாபன், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior