உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

வைகோ பழ நெடுமாறன் கடலூர் சிறையில் அடைப்பு

கடலூர் : 

            சென்னையில் கைது செய்யப்பட்ட வைகோ, பழ நெடுமாறன் நேற்று அதிகாலை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

              சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடக்கோரியும், இலங்கைத் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டித்தும் சென்னையில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வைகோ, பழ நெடுமாறன், நடராஜன் உள்ளிட்ட 159 பேரை கைது செய்து, புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். சிறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.05 மணிக்கு கடலூர் மத்திய சிறைக்கு இவர் களை கொண்டு வந்தனர். அவர்களை சிறை அதிகாரிகள் சோதனை செய்து, சிறையில் அடைக்க காலை 8 மணி ஆனது. தகவலறிந்த ம.தி.மு.க., நிர்வாகிகள், கடலூர் மத்திய சிறைக்குச் சென்று வைகோவை சந்தித்துப் பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior