உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

கல்விக்காக 75 ஆயிரம் கோடி கடன் வழங்கி மத்திய அரசு சாதனை: வேப்பூரில் எம்.பி., அழகிரி பேச்சு

சிறுபாக்கம் : 

              கல்விக்காக 75 ஆயிரம் கோடி கடன் வழங்கி மத்திய அரசு சாதனை படைத்துள்ளதாக எம்.பி., அழகிரி பேசினார். வேப்பூர் பஸ் நிலையத்தில் காமராஜர் 108வது பிறந்த நாள் விழா நடந்தது. காங்., மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் நீதிராஜன் முன்னிலை வகித்தார். 

பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் மற் றும் கல்வெட்டினை திறந்து வைத்து கடலூர் எம்.பி.,அழகிரி பேசியதாவது:

               கடந்த காலங்களில் தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைவாக இருப்பதை அறிந்த அப்போதைய முதல்வர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து புரட்சி செய்தார். இதனால் ஏழைகள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினர். அவரது ஆட்சியில் நான் கில் ஒரு பங்கு நிதியை கல்விக்காக ஒதுக்கீடு செய்தார்.

                இன்று விவசாயிகளுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை காங்., தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் பொதுத் துறை வங்கிகள் மூலம் 42 கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டது. இந்தியாவில் கல்விக்காக 75 ஆயிரம் கோடி கடன் வழங்கி மன்மோகன்சிங் அரசு சாதனை படைத் துள்ளது.ஏழை மக்கள் வறுமையில் வாடுவதை நினைத்து தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தினை சட்டமாக இயற்றியுள்ளது. இதனால் வயதானவர்களும் வாழ்வில் ஏற்றம் பெற்றுள்ளனர்.

                  இவ்வாறு எம்.பி., அழகிரி பேசினார். விழாவில் மாவட்ட இளைஞர் காங்., வனிதா, ராகுல்காந்தி பேரவை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, காங்., நிர்வாகிகள் வேதமாணிக்கம், மதார்ஷா உட் பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior