உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

பண்ருட்டி அருகே விவசாயியிடம் செக் மோசடி கேரள வியாபாரி சிறையிலடைப்பு

பண்ருட்டி : 

             செக் மோசடி வழக்கில் கேரளாவை சேர்ந்த முந்திரி வியாபாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

              பண்ருட்டி அடுத்த சாத்திபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசுதாஸ். முந்திரி விவசாயியான இவரிடம் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த முந்திரி வியாபாரி அப்துல்ரகுமான் (55) முந்திரி வாங்கி வியாபாரம் செய்து வந்தார். ஏசுதாசிடம் வாங்கிய முந்திரிக்காக அப்துல்ரகுமான் 2 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.

              அதனை ஏசுதாஸ் வங்கியில் செலுத்தியபோது, அப்துல்ரகுமான் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. பலமுறை ஏசுதாஸ் கேட்டும் பணத்தை தரவில்லை. அதனைத் தொடர்ந் ஏசுதாஸ் பண்ருட்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த 2007ம் ஆண்டு "செக்' மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஈஸ்வரன், "செக்' மோசடி செய்த அப்துல்ரகுமானை கோர்ட்டில் ஆஜர் படுத்த கேரள மாநில போலீசாருக்கு உத்தரவிட்டார். கேரள மாநிலம் கிளகல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் தங்கச்சன், ஏட்டுகள் அனில்குமார், விஜயகுமார் ஆகியோர் முந்திரி வியாபாரி அப்துல்ரகுமானை கைது செய்து நேற்று பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஈஸ்வரன், முந்திரி வியாபாரி அப்துல்ரகுமானை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior