உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 14, 2010

காட்டுமன்னார்கோவில் பள்ளி ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

சிதம்பரம்:

            காட்டுமன்னார்கோவில் பருவதராஜ குருகுல மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.சின்னமணி 2009-10-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
               இவர் 1979-ம் ஆண்டு முதல் பருவதராஜ குருகுருலம் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை கணிதப் பாட ஆசிரியராக பொறுப்பேற்று, 2004-ம் ஆண்டு முதல் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவரது ஆசிரியர் பணியை பாராட்டி தமிழக அரசு 2007-ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்தது. மேலும் டாக்டர் அம்பேத்கர் விருதையும் இவர் பெற்றுள்ளார். இவரது கல்விப் பணியைப் பாராட்டி தற்போது மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது செப்டம்பர் 5-ம் தேதி புதுதில்லியில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படவுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior