உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 14, 2010

சத்துணவு பணியாளர்களை முழு நேர பணி நிரந்தர அறிவிப்பு வெளியிட முதல்வருக்கு கோரிக்கை

விருத்தாசலம்: 

              சத்துணவு பணியாளர்களை முழு நேர பணி நிரந்தரம் செய்து சுதந்திர தினத்தில் அறிவிக்கக் கோரி முதல்வருக்கு சத்துணவுப் பணியாளர் சங்கம் வேண்டுகோள் விடுத் துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சத்துணவுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் விஜயபாண்டியன் முதல்வர் கருணாநிதிக்கு விடுத்துள்ள வேண்டுகோள்: 
                   சத்துணவு அமைப்பாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 60 ஆயிரம் பேர் உரிய கல்வித் தகுதியுடன் 27 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகின்றனர். தமிழக அரசின் தினக் கூலி, தொகுப்பூதியம் பெற்று 10 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் ஒரு லட்சம் பேர் கடந்த நான்கு ஆண்டுகளில் பணி வரையறை செய்துள்ளது. எனவே வரும் சுதந்திர தின உரையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை முழு நேர பணி நிரந்தரப்படுத்தி பணி வரையறை செய்து நிலையான காலமுறை ஊதியம் வழங்க அறிவிக்கவேண்டும். சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு சம ஊதியம் வழங்கிடவும், ஓய்வூதிய விதிப்படி அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியமாக வழங்க அறிவிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior