உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 16, 2010

அண்ணாமலைபல்கலையில்சுதந்திர தினம்

சிதம்பரம்: 

            சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் துணைவேந்தர் ராமநாதன் தேசியக்கொடியேற்றினார்.

            சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டுத் திடலில் சுந்திரதின கொடியை துணைவேந்தர் ராமநாதன் ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படையின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். ரத்ததானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கியதுடன், "உடல் பருமனும் யோக பயிற்சி முறையும்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். 

                நிகழ்ச்சியில் பதிவாளர் ரத்தினசபாபதி, துணைவேந்தர் நேர்முக உதவியாளர் ராஜசேகர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீனாட்சிசுந்தரம், தொலைதூரக்கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ், விஸ்வநாதன், பி.ஆர்.ஓ., செல்வம், ஆளவை மன்ற உறுப்பினர் தில்லை சீனு, இணைதேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தவமணி, வளர்ச்சிஅலுவலர் குமரப்பன், பதிவா ளர் உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior