உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 16, 2010

பண்ருட்டியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

பண்ருட்டி,: 

              பண்ருட்டி பகுதியில் உள்ள பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது.

               பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க ஐகோர்ட் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலரால் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பண்ருட்டியில் கெடிலம் ஆற்றங்கரை அடுத்துள்ள சந்தைதோப்பில் ஆய்வு நடந்தது. இதில் 25 பள்ளிகளைச் சேர்ந்த 38 பஸ்,வேன் வாகனங்களை தாசில்தார் பன்னீர்செல்வம், போக்குவரத்து ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

                ஆய்விற்கு பின் நடந்த நிகழ்ச்சியில் தாசில்தார் பன்னீர் செல்வம் பள்ளி வாகன டிரைவர்கள், உரிமையா ளர்கள் அன்றாடம் கடைபிடிக்க வேண் டிய வழிமுறைகள் குறித்து பேசினார்.மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் விபத்துகளை தவிர்ப்பது குறித்து பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior