உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 22, 2010

விழுப்புரம்- மயிலாடுதுறை சரக்கு ரயில் 3 முறை இயக்கம்

கடலூர் :

                   விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் நேற்று ஒரே நாளில் மூன்று முறை சரக்கு ரயில் இயக்கப்பட்டது. விழுப்புரம்-மயிலாடுதுறை 122 கிலோ மீட்டர் தூரம் மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல பாதையாக மாற் றும் பணி கடந்த 2006ம் ஆண்டு 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியது. ரயில்பாதை பணி முடிவடைந்ததை தொடர்ந்து இலகு ரக இன்ஜின் சோதனை ஓட்டம் நடத் தப்பட்டது.

                        கடந்த 5ம் தேதி இரண்டு சரக்கு ரயிலும், 7 மற்றும் 17ம் தேதிகளில் தலா ஒரு சரக்கு ரயில் இயக்கப்பட் டது. நேற்று ஐந்தாவது முறையாக மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரத்திற்கு சரக்கு ரயில் இயக்கப்பட் டது. மயிலாடுதுறையில் காலை  7.30 மணிக்கு 45 காலி வேகன்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் காலை 9.58 மணிக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேஷனை கடந்து விழுப்புரம் சென்றது. பின் விழுப்புரத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்ட சரக்கு ரயில் மாலை 3.20 மணிக்கு கடலூரை கடந்து கும்பகோணம் சென்றது. தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வருவதற்காக தஞ்சாவூருக்கு மற்றொரு சரக்கு ரயில் இயக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior