உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 22, 2010

மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்

பண்ருட்டி :

                      மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு புகைப்படம் எடுக்கும் பணி பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

பண்ருட்டி  சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் புவனேஸ்வரி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

      பண்ருட்டி தாலுகாவில் மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு புகைப்படம் எடுக்கும் பணி இரு கட்டமாக கிராமங்களில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் நடந் தது. இதில் விடுபட்டவர் கள் புகைப்படம் எடுக்கும் பணி பண்ருட்டி தாலுகா அலுவலக முதல் மாடியில்  நேற்று முன்தினம் துவங்கியது.

                 மூன்று மாதம் நடைபெறும் இந்த முகாமில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். புகைப்படம் எடுக்க வரும் பயனாளிகள் ரேஷன் கார்டு, விவசாய சமூக பாதுகாப்பு அட்டை, தொழிலாளர் நல வாரிய அட்டையுடன் ஆஜராக வேண்டும். மேற்படி அடையாள அட்டை  இல்லாதவர்கள் அந்ததந்த வி.ஏ.ஒ.விடம் 72,000ரூபாய்க்கு குறைவான வருவாய் உள்ளவர்கள் ரேஷன் கார்டு மற்றும் வருமான சான்றுடன் ஆஜராகி புகைப்படம் எடுத்துகொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior