உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 22, 2010

மதுபாட்டில் கடத்திய கார் ஓடையில் கவிழ்ந்தது

குறிஞ்சிப்பாடி :

                  கடலூர் அருகே ஓடையில் கவிழ்ந்து கிடந்த கார் அருகே 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். கார் யாருடையது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

               க   டலூர் அடுத்த குள்ளஞ்சாவடி அருகே உள்ள கருமாச்சிபாளையம் செங்கால் ஓடையில் நேற்று அதிகாலை அம்பாசிடர் கார் கவிழ்ந்து கிடந்தது. குள்ளஞ்சாவடி போலீசார் சென்று பார்த்தபோது, கார் அருகே 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்தபோது கார், ஓடையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதும், காரில் வந்தவர்கள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துவிட்டு தப்பியுள்ளனர். போலீஸ் விசாரணையில் காரின் பதிவெண் போலியானது என்பது தெரிய வந்துள்ளது. குள்ளஞ்சாவடி போலீசார், கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior