உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 22, 2010

ஏமாறவேண்டாம் மின்வாரியம் எச்சரிக்கை

சிதம்பரம்: 

                       சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் மின்வாரியப் பணியாளர்கள் எனக் கூறிக்கொண்டு, பழைய மீட்டர்களை மாற்ற வேண்டும் எனவும், மேலும் சில காரணங்களை கூறி, மின் நுகர்வோர்கள் வீடுகளுக்கு சென்று சில சமூக விரோதிகள் பணம் வசூலிப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. சிதம்பரம் மின்வாரிய பணியாளர்கள் எவரும் மேற்படி செயல்களில் ஈடுபடவில்லை. 

                           எனவே, சமூக விரோதிகளிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என சிதம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் இரா.செல்வசேகர் தெரிவித்துள்ளார்.  மேலும் மின்வாரிய பணியாளர்கள் வரும்போது அவர்களிடம் நுகர்வோர்கள் அடையாள அட்டையை காண்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.மின்வாரியப் பணி நிமித்தமாக வரும் நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால், கீழ்கண்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம் என இரா.செல்வசேகர் தெரிவித்துள்ளார்.  

               தொலைபேசி எண்கள்: செயற்பொறியாளர்- 94458 56028: உதவி செயற்பொறியாளர்- 94458 56047: இளமின் பொறியாளர்- 94458 56049: உதவி மின்பொறியாளர்- 94458 56048.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior