உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 22, 2010

விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு

கடலூர்:    

                          வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை விரைந்து முடிக்குமாறு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு)  எஸ்.நடராஜன் உத்தரவிட்டா.  கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருக்கும் பெயர்கள் குறித்து வீடுவீடாகச் சென்று ஊழியர்கள் சரிபார்த்து வருகின்றனர். வாக்காளர் 1529 பாகங்களாக பிரிக்கப்பட்டு இப்பணி நடந்து வருகிறது. புதியதாக பெயர்களைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதில் களப் பணியாளர்கள் 1008 பேர் ஈடுபட்டு உள்ளனர். அவர்களைக் கண்காணிக்க அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.   மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தலைமை தாங்கிப் பணிகளை ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை விரைந்து முடிக்குமாறு  அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior