உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 22, 2010

வேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருக்கு அபராதம்

கடலூர் :

             மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருக்கு கடலூர் கோர்ட்டில் அபராதம் விதிக்கப்பட்டது. குள்ளஞ்சாவடி அடுத்த ராமநாதன்குப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவர் 2007ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி இரவு 12 மணிக்கு குள்ளஞ்சாவடி ஆலப்பாக்கம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

               அதில் ஆலப்பாக்கம் ரமேஷ், பிரேம்நாத் படுகாயமடைந்தனர் .இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் மணிகண்டனை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்-3ல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரம், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய மணிகண்டனுக்கு 2,100 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior