உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 22, 2010

நகை கடையில் கொள்ளை அடித்து தப்பியவர்களின் கார் சிக்கியது

பரங்கிப்பேட்டை :

                     நகை வாங்குவது போல் நடித்து ஐந்து சவரன் செயினை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பியோடியவர்களின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் அடுத்த பு.முட்லூரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதே பகுதியில் நகைக் கடை வைத் துள்ளார். நேற்று முன்தினம் மாலை இவரது கடைக்கு வந்த டிப்டாப் ஆசாமிகள் இருவர் நகை வாங்குவது போல் நடித்து, ஐந்து சவரன் செயினை கொள்ளை அடித்துக் கொண்டு மாருதி காரில் தப்பிச் சென்றனர்.

                  இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடிவந்தனர். இந்நிலையில் மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்ற மாருதி கார் நேற்று புதுச்சத்திரம் அடுத்த அத்தியாநல்லூர் அருகே காலி மனையில் நின்றிருந்தது. அதன் நெம்பர் பிளேட் உடைக் கப்பட்டிருந்தது. தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று காரை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய நபர்களை போலீசார்  தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior