உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 02, 2010

உரிமம் இன்றி 'பார்' நடத்திய 10 பேர் கைது

கடலூர் : 

                  கடலூரில்  டாஸ்மாக் கடைகள் அருகே உரிமம் இன்றி பார் நடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூரில் டாஸ்மாக் கடைகள் அருகே உரிமம் இன்றி "பார்' நடத்துவதாக வந்த புகாரின் பேரில் டி.எஸ்.பி., ஸ்டாலின் தலைமையில் போலீசார் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர். அதில் கடலூர் பீச் ரோட்டில் பார் நடத்திய மேல்பட்டாம்பாக்கம் பாஸ்கர் (53), திருவண்ணாமலை ராமு (38), விஜய் (41), வளவனூர் சிங்காரவேலு (27), மதுரையைச் சேர்ந்த கேஷியர் பார்த்தசாரதி (37), கூத்தப்பாக்கம் நச்சினார்க்கினியன் (55) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அதேபோன்று திருப்பாதிரிப்புலியூர் மற்றும் கூத் தப்பாக்கம் டாஸ்மாக் கடை அருகே பார் நடத் திய  திருப்பாதிரிப்புலியூர் பழனிவேல் (21), சரவணன் (29), சந்தோஷ்குமார் (30), கே.என். பேட்டை பழனி (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior