உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 02, 2010

வள்ளலார் சித்தி பெற்ற திரு அறையில் தரிசனம்

குறிஞ்சிப்பாடி : 

               கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 139வது தைப்பூச ஜோதி தரிசன விழா கடந்த 30ம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து, வள்ளலார் சித்தி பெற்ற திரு அறை தரிசனம் மேட்டுக்குப்பத்தில் நேற்று நடந்தது. திருஅறை தரிசனத்தை முன்னிட்டு காலை முதல் மகாமந்திரம் ஓதுதல், திருஅருட்பா இன் னிசை, வள்ளலார் வாழ்வியல் இசைச் சொற்பொழிவு நடந்தது.
 
                          முன்னதாக வடலூர் தரும சாலையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய எழுதுகோல், ஆடைகள், புத்தகம் அடங்கிய பேழையை பல்லக்கில் வைத்து வள்ளலார் நடந்து சென்ற பாதையான கருங்குழி, பெருமாள் கோவில் தெரு, தீச்சுவை ஓடை வழியாக மீனவ சமுதாய மக்களால் மேட்டுக்குப்பம் கொண்டு வந்து அங்கு வள்ளலார் சித்தி பெற்ற அறை முன் வைத்து திருஅறை திறக்கப்பட்டு தரிசனம் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வணங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior