உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 02, 2010

புவனகிரி பள்ளிக்கு தற்காலிக ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் நியமிக்க முடிவு

புவனகிரி : 

            புவனகிரி அரசு ஆண்கள் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் இரண்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து புவனகிரி சங்கமம் என்கிற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதன் தலைவராக நடனசபாபதி, துணைத்தலைவராக ராபர்ட் ராஜசேகரன், பொதுச் செயலாளராக உதயசூரியன், இணை பொதுச் செயலாளர்களாக பாலசந்தர், திருமாள்வளவன், இணை செயலாளர்களாக அண்ணாஜோதி, சரவணன், ஞானவள்ளல், கண்ணன்,வெங்கடேசன், பொருளாளராக ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டனர்.
 
                 பள்ளியின் வளர்ச்சிக்கும், பள்ளி கல்வி வளர்ச்சிக்கும் முன்னாள் மாணவர்கள் 100 பேரிடமிருந்து பெறப்பட்ட 4 லட்சம் ரூபாய் புவனகிரி சங்கமம் அமைப்பிற்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் தற்பொழுது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை கூடுதலாக்கவும், பள்ளி தலைமை ஆசிரியரின் ஒப்புதலோடு  தற்காலிகமாக இரண்டு பட்டதாரி ஆசிரியர்களை பணியில் அமர்த்துவது எனவும், அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தை பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior