உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 02, 2010

காந்தி நினைவு தினத்தையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு மரக்கன்றுகள்

சிதம்பரம் : 

            காந்தி நினைவு தினத்தையொட்டி சிதம்பரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு டி.எஸ்.பி., மூவேந்தன் மரக்கன்றுகள் வழங்கினார். சிதம்பரம் அண்ணாமலைநகர் தெற்கிருப்பில் உள்ள லீலா மெமோரியல் மெட்ரிக் பள்ளியில்  காந்தி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகி வேதநாயகி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் லீலா குமாரி வரவேற்றார்.டி.எஸ்.பி., மூவேந்தன் பங்கேற்று பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். பின்னர் பள்ளி குழந்தைகள் 200 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், மரம் வளர்ப்பது வருங்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதால் அனைவரும் மரம் வளர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior