உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 02, 2010

சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் 11ம் தேதி தீப்பந்தம் ஏற்றும் போராட்டம்

சிதம்பரம் : 

             சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு போடாததை கண்டித்து வரும் 11ம் தேதி மா.கம்யூ., சார்பில் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் நடக்கிறது. 

இதுகுறித்து மா.கம்யூ., நகர செயலாளர் ராமச் சந்திரன் விடுத்துள்ள அறிக்கை: 
                          
                               சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு போடப்படாததால் திறக்கப்பட்டதில் இருந்து மக்களின் உயிர் குடிக்கும் பாலமாக உள்ளது. இது குறித்து அனைத்து தரப்பு அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சிதம்பரம் ஆர்.டி.ஓ., வை சந்தித்து பாலத்தில் மின் விளக்கு வசதியும், விபத்து தடுக் கும் வசதியையும் செய்து தர வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை.எனவே மாவட்ட நிர்வாகம் உடன் சிதம்பரம் ரயில்வே பாலத்தில் இருபுறமும் ரவுண் டானா, மின் விளக்கு வசதி செய்து தரக்கோரி வரும் 11ம் தேதி மேம்பாலத்தில் தீப் பந்தம் ஏற்றும் போராட் டம் நடத்தப்படுகிறது. நகர் குழு உறுப்பினர் ராஜா தலைமையில் மாநில குழு உறுப்பினர் மூசா, மாவட்டக்குழு நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior