உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 02, 2010

தனியார் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டு போட்டி

கடலூர் : 

                    தனியார் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடலூரில் நடந்தது. மாவட்டத்தில் 22 தனியார் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு இடையோன மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. துவக்க விழாவிற்கு ஆர்.கே., ஐ.டி.ஐ., முகுந் தன் தலைமை தாங்கினார். நெய்வேலி கெங்குசாமி ஐ.டி.ஐ., முருகவேல், வளையமாதேவி எம்.கே.ராமன் ஐ.டி.ஐ., சரவணன் முன்னிலை வகித் தனர். போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் துவக்கி வைத்தார். கைப்பந்து, கால்பந்து, பால் பேட்மிட்டன், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு மற்றும் ஈட்டி எறிதல், 100 மீட் டர், 200 மீட்டர், 400 மீட் டர், 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்ட போட்டிகள் நடந்தன. இதில் 22 ஐ.டி.ஐ.,க்களை சேர்ந்த 500 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி வெற்றவர்களுக்கு மாலையில் நடந்த விழாவில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திருச்சி மண்டல இணை இயக்குநர் ரவிபாஸ்கர் பரிசு வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior