உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 02, 2010

கல்லூரி மாணவர் விபத்தில் பலி

பரங்கிப்பேட்டை : 

                   கடலூர் அருகே, நின் றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சென்னை தனியார்  இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் இறந்தார். சிதம்பரம் அடுத்த புவனகிரியை சேர்ந்த சித்தா டாக்டர் குணசீலன் (50). இவரது மகன் சரவணன் (21) சென்னையில் தனியார் இன்ஜினியரிங் கல் லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக புவனகிரி வந்திருந்த சரவணன், நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு சென்றுக் கொண்டிருந்தார்.ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே முன்னால் சென்ற பஸ்சை முந்திச் செல்ல முயன்றபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியது. அதில் சரவணன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior