உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 02, 2010

மகளிர் ஸ்டேஷன் பணிகள் சுவீடன் மாணவியர் ஆய்வு

திண்டிவனம் : 

               சுவீடன் நாட்டை சேர்ந்த மாணவியர், மகளிர் போலீஸ் நிலையத்தின் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். சுவீடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம்  பகுதியில் செயல்படும்  ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படிக்கும் மாணவியர் 16 பேர், கடந்த மாதம் 18ம் தேதியிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இக்குழுவை சேர்ந்த மாணவியர் பியத்ரா, தெரியாஸ், மரியா ஆகியோர் திருச்சி உருமு கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர் ஆண்டனிசெல்வராஜ் உதவியுடன், சமுதாயத்தில் பெண்களின் நிலை, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் உட்பட, பல்வேறு தலைப்புகளில் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். இம்மாணவியர் நேற்று காலை திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலையத்தில் நடைபெறும் பணிகள் குறித்து, மகளிர் போலீசாரிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். போலீஸ் நிலையத்தில், பெண் களால் கொடுக்கப்படும் புகார் மற்றும் அதன் மீது போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior