உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 02, 2010

சத்தியவாடி ஊராட்சியில் 'டிவி' வழங்கும் விழா

விருத்தாசலம் : 

                சத்தியவாடி ஊராட்சியில் நடந்த விழாவில் அமைச்சர் பன்னீர்செல் வம் பயனாளிகளுக்கு "டிவி'க்களை வழங்கினார். விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி ஊராட்சியில் நடந்த விழாவிற்கு கலெக் டர் (பொறுப்பு) நடராஜன் தலைமை தாங்கினார். ஒன் றிய சேர்மன் ராஜாமணி முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி வரவேற்றார்.புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் பன் னீர்செல்வம் பேசியதாவது:
 
                   சமூகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக தி.மு.க., அரசு பெரிதும் உறுதுனையாக உள்ளது. பொது மக்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. தமிழகத்தில் குடிசைகளை ஒழிக்க புதிய திட்டம் செயல்பட உள் ளது. எனவே பொதுமக் கள் தி.மு.க., அரசுக்கு என்றும் ஆதரவு தரவேண்டும் என்றார். விழாவில் ஆர்.டி.ஓ., (பொறுப்பு) ராமராஜ், சேர்மன் முருகன், ஒன்றிய கல்விக்குழு உறுப்பினர் ராமு, மாவட்ட ஊராட்சி தலைவர் சிலம்புசெல்வி, துணை தலைவர் பிரான் சிஸ்மேரிஞானமுத்து, மாவட்ட கவுன்சிலர் துரைமகாதேவன், ஒன்றிய துணை தலைவர் பழனிவேல், கவுன்சிலர் ஜெயமணி, ஊராட்சி துணை தலைவர் அன்பழகன், பி.டி.ஓ.,க்கள் கலியபெருமாள், மனோகரன், தாசில்தார் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior