உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 02, 2010

பெண்ணையாற்றில் சுமோ கவிழ்ந்தது: டிரைவர் உயிர் தப்பினார்

கடலூர் : 

                 கடலூர் பெண்ணையாற்று பாலத்தில் இருந்து சுமோ உருண்டு விழுந்ததில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவட்டாறு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(28). ரிலையன்ஸ் கம்பெனிக்கு வாடகைக்கு சுமோ ஓட்டி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு ரிலையன்ஸ் அதிகாரி ஒருவரை சென்னையில் விட்டுவிட்டு சீர்காழிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். நேற்று காலை 6 மணிக்கு கடலூர் பெண் ணையாறு பாலத் திற்கு ஏற முயன்றபோது சுமோ கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் இருந்த இரும்பு தடையை உடைத்துக் கொண்டு 30 அடி பள்ளத்தில் உருண் டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சுமோவில்  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டிரைவரை காப்பாற்றி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior