உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 10, 2010

இரு தரப்பு மோதல்: 11 பேர் மீது வழக்கு

காட்டுமன்னார்கோவில் :

                  இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த கொத்தவாசலை சேர்ந்தவர் நாகராஜன் மனைவி சுமதி (45). செட்டிக்கட்டளை ஊராட்சி தலைவரான இவரிடம் அதே பகுதியை சேர்ந்த செல்வி, சதீஷ், தட்சணாமூர்த்தி, பிரபாகரன், பிரகாஷ் ஆகியோர் தெரு விளக்கு எரியவில்லை, குடி தண்ணீர் வரவில்லை என முறையிட்டனர். அதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஐந்து பேரும் சேர்ந்து சுமதி மற்றும் அவரது உறவினர்கள் தேவி, தேவகி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனை அறிந்த சுமதியின் ஆதரவாளர்கள் சிலர், செல்வி மற்றும் ராணியை தாக்கினர். இது குறித்து ஊராட்சி தலைவர் சுமதி மற்றும் செல்வி ஆகியோர் கொடுத்த புகார்களின் பேரில் புத்தூர் போலீசார் இருதரப்பை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior