உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 10, 2010

பண்ருட்டியில் எண்ணெய் பனை தோப்புகளை வேளாண் கூடுதல் இயக்குனர் மதுமதி ஆய்வு

பண்ருட்டி : 

                 பண்ருட்டி பகுதியில் பயிரடப்பட் டுள்ள பயிர் மற்றும் எண்ணெய் பனை தோப்புகளை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் மதுமதி ஆய்வு செய்தார். பண்ருட்டி வேளாண் வட்டார பகுதியான வையாபுரிபட்டினம், கட்டியம்பாளையம் கிராமங்களில் பயிரிட்டுள்ள விளை நிலங்களை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் மதுமதி ஆய்வு செய்தார். அப்போது பயிறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைய உளுந்து, துவரை பயிரை தனிப் பயிராகவும், கரும்பு, சவுக்கு, மணிலா, மரவள்ளி பயிரில் ஊடுபயிராகவும் பயிரிட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.வையாபுரிபட்டினத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் விதைப்பு செய்த தனிப்பயிர் உளுந்து விதைப் பண்ணைகளையும், கட்டியம்பாளையம் கிராமத்தில் ஐசோபாம் எண்ணெய் பனை பெருக்கு திட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள பனை தோப்புகள், கரும்பில் ஊடுபயிராக விதைப்பு செய்த உளுந்து பயிரை ஆய்வு செய்தார்.இதில் வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன், துணை இயக்குனர்கள் பாபு, ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர்கள் ஹரிதாஸ், தரக்கட்டுபாடு உதவி இயக்குனர் சுந்தர்ராஜன், இணை இயக்குனர்கள் விஷ்ணுராம்மேத்தி, மலர்வண் ணன், ரவிசேகர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior