உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 10, 2010

கடலூர் முதுநகரில் தீ விபத்து : ரூ.20 ஆயிரம் பொருட்கள் சேதம்

கடலூர் : 

             கடலூர் முதுநகர் அருகே வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 வீடுகள் சேதமடைந்தன.

           க  டலூர் முதுநகர் அடுத்த மணக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ் ணன். விவசாய கூலியான இவரது குடும்பத்தினர் அனைவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றிருந்த போது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதேப்போன்று சான்றோர்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். அனைவரும் வீட்டில் இருந்த நிலையில் வீடு தீ பிடித்து எரிந்தது.தகவலறிந்த சிப்காட் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த தீ விபத்துகளில் 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior