உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 10, 2010

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு : நெடுஞ்சாலைத்துறை அதிரடி

விருத்தாசலம் : 

                   விருத்தாசலம் முக்கிய சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ் சாலைத்துறையினர் நேற்று அதிரடியாக அகற்றினர். விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு, கடைவீதி, கடலூர் ரோடு, சிதம்பரம் ரோடு ஆகிய சாலைகள் அப்பகுதி வியாபாரிகளால் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.  இதுகுறித்து கவுன்சிலர் கள் நகர மன்ற கூட்டத் தில் முறையிட்டனர். அப்போது நெடுஞ் சாலைத் துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப் படும் என சேர்மன் முருகன் பதில் அளித்தார். அதன்படி நேற்று நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட மேலாளர் தில்லைக் கோவிந்தன் மற்றும் அதிகாரிகள் நகராட்சி ஊழியர்களின் உதவியுடன் தாசில்தார் ஜெயராமன் முன்னிலையில் பாலக்கரையில் இருந்து பஸ்நிலையம் வரை சாலையின் இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior