உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 10, 2010

மாவட்ட கராத்தே போட்டி பரிசளிப்பு விழா

சிதம்பரம் : 

            கியாகாண்டோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி மற்றும் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடந்தது.

            வீனஸ் மெட்ரிக் பள்ளி நிறுவனர் குமார் தலைமை தாங்கினார். சேத்தியாத்தேப்பு எஸ்.டி.எஸ்., பள்ளி நிர் வாகி சாமுவேல் முன்னிலை வகித்தார். கியாகாண்டோ கராத்தே பள்ளி நிறுவனர் ரங்கநாதன் வரவேற்றார். மாவட்ட அளவில் ஷாய் மற்றும் கட்டா பிரிவுகளில் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சி மைய இயக்குநர் பாலசுப்ரமணியன் பரிசு வழங்கினார். கராத்தே சங்க மாநில தலைவர் பிரான்சிஸ் சேவியர், பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கினார். பின்னர் கராத்தே வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. பயிற்சியாளர் இளவரசன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior