உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 10, 2010

கிராம உதவியாளர்களுக்கு இருக்கை : முதல்வருக்கு மா.கம்யூ., மனு

கடலூர் : 

                கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என முதல்வருக்கு மனு கொடுத்துள்ளனர். 

இது குறித்து கடலூர் ஒன்றிய மா.கம்யூ., செயலாளர் மாதவன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

                 வருவாய்த் துறையில் பணியாற்றும் கிராம உதவியாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தரையில் உட்கார்ந்து பணியாற்றும் அவல நிலை உள்ளது.

            அரசு துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் நாற்காலியில் உட்காரும் நிலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கிராம உதவியாளர்களை தரையில் உட்காரவைப்பது. தீண்டாமையை கடைபிடிக்கும் பாரபட்ச அணுகுமுறையாகும்.எனவே முதல்வர் உடன் தலையிட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் கிராம உதவியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior