உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 10, 2010

நகராட்சி நிர்வாகம் அலட்சியம் : கடலூரில் தொற்று நோய் அபாயம்

கடலூர் : 

          கடலூரில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை நகரின் மையப்பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் நகராட்சி நிர்வாகம் கொட்டி வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

             கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் துப் புரவு பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டது. இதில் சேகரிக்கப்படும் குப்பைகள் பச்சையாங்குப்பம் எருக்கிடங்கில் கொட்டப்படும். இதன் எடையை கணக் கிட்டு பணம் வழங்கப் பட்டு வந்தது. தற்போது துப்புரவு பணிக்கு தனியார் எவரும் வராததால் நகராட்சி நிர்வாகமே மேற்கொண்டுள்ளது. திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தினசரி சேகரமாகும் குப்பைகளை லாரியில் ஏற்றி பச்சையாங்குப் பம் எருக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல், நகரின் மையப்பகுதியில் உள்ள அண்ணா பாலத் தின் அருகில் கெடிலம் ஆற்றில் கொட்டி வருகின்றனர். இதில் மார்க் கெட் மற்றும் ஓட்டல் கழிவுகளையும் இங்கேயே கொட்டுவதால் காய்கறி, இலைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது.  இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளின் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றன. இதனால் அண்ணாபாலம் அருகே ஜவான்ஸ் பவன் அருகில் சென்றாலே துர்நாற்றம் வீசுவதோடு, அதிலிருந்து பரவும் கொசு உள்ளிட்ட கிருமிகளால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து நீடித்து வருகிறது.
                நகரின் சுகாதாரத்தை காத்திட வேண்டிய நகராட்சி நிர்வாகமே, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அதுவும் ஆற்றில் குப்பைகளை கொட்டி மாசுபடுத்தி வருவது வேதனையளிக்கிறது. இனியேனும் கெடிலம் ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior