உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 10, 2010

கடலூரில் புதிய ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்

கடலூர் : 

          கடலூரில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை எம்.எல்.ஏ., அய்யப்பன் திறந்து வைத்தார்.

         கடலூர் மஞ்சக்குப்பம் அழகப்பா நகரில் எம்.எல். ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 3 லட்சம் ரூபாய் மதிப் பில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.  இதன் திறப்பு விழாவிற்கு சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். துணைச் சேர் மன் தாமரைச்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் வெங்கடேசன், கமிஷனர் குமார் முன் னிலை வகித்தனர். கவுன்சிலர் நவநீதம் வரவேற்றார். எம்.எல்.ஏ., அய்யப்பன் ரேஷன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பொது வினியோகத் திட்ட துணை பதிவாளர்கள் மகபூப் ஷெரீப், பயிற்சி துணை பதிவாளர் பார்த்திபன், தனி அலுவலர் பாரதி, அவைத் தலைவர் நாராயணன், கவுன்சிலர் இளங் கோவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior