உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 10, 2010

விருத்தாசலத்தில் பாசனப்பகுதி மேன்மை நீர் மேலாண்மை திட்ட பயிலரங்கம்

விருத்தாசலம் : 

                  விருத்தாசலத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் பாசனப்பகுதி மேன்மை மற்றும் நீர் மேலாண்மை திட்ட பயிலரங்கம் நடந்தது. விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்த பயிலரங்கத்திற்கு வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். திட்டக்குடி உதவி செயற்பொறியாளர் நடேசன் முன்னிலை வகித்தார்.பாசன பகுதிகளை மேன்மை படுத்துதலில் தொழில் நுட்ப முறைகள் குறித்து பொதுப்பணி துறை செயற்பொறியாளர் செல்வகுமார், பாசன பகுதி மேன்மை இளநிலை பொறியாளர் முருகேசன், இயந்திர கலப்பை பணிமனை உதவி பொறியாளர் விஜயகுமார், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சாத்தையா, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பத்மநாபன், உதவி பேராசிரியர்கள் ரஜூ, ஹரிப்பிரியா ஆகியோர் பேசினர்.பாசன சபை தலைவர்கள் வேணுகோபால், ராஜசேகர், தமிழரசன், மருதாசலம், பொன்னுசாமி, ரவீந்திரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.இளநிலை பொறியாளர் அரவிந்தன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior