உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 06, 2010

பால்தாக்கரே உருவபொம்மை எரிப்பு கடலூரில் காங்கிரசார் 23 பேர் கைது

கடலூர் : 

                     கடலூரில் பால்தாக் கரே உருவபொம்மையை எரித்த காங்., கட்சியினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர். மும்பை யாருக்கு சொந் தம் என்ற விவகாரத்தில் கருத்து கூறிய அகில இந் திய காங்., பொதுச் செயலர் ராகுல் காந்தி பற்றி சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே விமர்சனம் செய்தார்.  ராகுல் காந்தி உருவ பொம்மையை சிவசேனா கட்சியினர் எரித்தனர். இதனைக் கண்டித்தும், பால்தாக்கரே குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி  இளைஞர் காங்., கட்சியினர் கிஷோர்குமார் தலைமையில் கடலூர் தபால் நிலையம் அருகே பால்தாக்கரே உருவ பொம் மையை நேற்று மதியம் எரித்தனர். கடலூர் புதுநகர் போலீசார் தீயை அணைத்து உருவ பொம்மையை கைப்பற்றினர். இளைஞர் காங்., பொதுச் செயலர் சரவணன், ராஜ்குமார், மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி, எம்.பி.,யின் செய்திதொடர்பாளர் குமார், விவசாய பிரிவு செயலர் வேலுச் சாமி, பரமாத்மா, ராஜசேகர், ஊராட்சி தலைவர் மாறன் உள்ளிட்ட 23 பேரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காங்., அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior