உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 06, 2010

லாட்டரி சீட்டு விற்ற பா.ம.க., பிரமுகர் கைது

சேத்தியாத்தோப்பு : 

                  லாட்டரி சீட்டு விற்ற பா.ம.க., மாநில தொழிற் சங்க துணை தலைவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்ட எஸ்.பி., அஷ்வின் கோட்னிசிற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ரவுடிகள் ஒழிப்பு சப் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப் போது தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த பா.ம.க., மாநில தொழிற்சங்க சர்க்கரை பிரிவு துணைத்தலைவர் பஞ்சநாதன், அமர்ஜோதி, சுப்ரமணியன் ஆகியோரை கைது செய்து சேத்தியாத்தோப்பு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior