உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 06, 2010

கண் சிகிச்சை முகாம்

கடலூர் : 

              கடலூரில் கண் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடந்தது. மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், லயன்ஸ் கிளப் ஆப் கடலூர் ஏன்சியன்ட் சிட்டி, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் கடலூர் டவுன் ஹாலில் நடந்தது. முகாமிற்கு லயன்ஸ் கிளப் ஆப் கடலூர் ஏன்சியன்ட் சிட்டி தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்  கினார். மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட ஒருங்கிணைப் பாளர் ஞானஸ்கந்தன், திட்ட மேலாளர் கேசவன் முன்னிலை வகித்தனர். ஏன்சியன்ட் சிட்டி செயலாளர் ஹாஷீம்பாபு வரவேற்றார். ரத்தினசபாபதி முகாமை துவக்கி வைத்தார். புதுச்சேரி அரவிந்த கண் மருத்துவமனை டாக்டர்கள் சுவாதி, பல்லவி தலைமையிலான குழுவினர் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior