உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 06, 2010

.ராணுவ போர்க்கால ஒத்திகை பயிற்சி என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்பு

சிதம்பரம் : 

                  சென்னையில் ராணுவ வீரர்கள் நடத்திய போர்க் கால ஒத்திகை பயிற்சியில் அண்ணாமலை நகர் 6வது என்.சி.சி., பிரிவு மாணவர்கள் பங்கேற்றனர். சென்னை அடுத்த அனந்தபுரம் ராணுவ மைதானத்தில் ராணுவ பிரிவு 5 ஜேக் ரைபில்ஸ் ராணுவ வீரர்கள் அதி நவீன துப்பாக்கிகள், பீரங்கி தாக்கும் ராக்கெட் லாஞ்சர்கள், கையெறி குண்டுகள் எம்.எம்.ஜி.,81 மீட்டர் மோட்டார்கள் போன்ற ஆயுதங்கள் உபயோகம் பற்றிய போர்க் கால ஒத்திகை பயிற்சி செய்து காட்டினர். ஜேக் ரைபில்ஸ் கமாண்டிங் அலுவலர் கர்னல் தீப் பகத் தலைமையில் சுமார் 60 ராணுவ வீரர்கள் போர்க்கால ஒத் திகை சண்டைப் பயிற் சியை செய்து காட்டினர்.  அண்ணாமலை நகர் 6வது என்.சி.சி., பிரிவு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர் கள் 150பேர் போர் ஆயுதங் கள் உபயோகிப்பது பற்றி தெரிந்துகொண்டனர். அண்ணாமலைநகர் 6வது என்.சி.சி., பிரிவு கமாண்டிங் அலுவலர் லெப்டினன்ட் கர்னல் அய்யப்பசாமி மாணவர்களுக்கு இந்திய ராணுவத்தின் அதிநவீன துப் பாக்கிகள், மார்ட்டர்கள் மெஷின் ன், ராக்கெட் லாஞ்சர், கையெறி குண்டுகள், மைன்கள் குறித்து விளக்கமளித்தார். மேஜர் அகோரம் சுபேதார் மேஜர் மனோகர், சுபேதார் ரெட்டி, ஹவில் தார் மேஷாக், கிருஷ்ணமூர்த்தி,  ரோக்கியசாமி உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வழிகாட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior