உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

ஊருக்குள் நுழைந்த முதலை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

சிதம்பரம் : 

                 சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை அருகே பிள்ளை முத்தாப்பிள்ளை சாவடி கிராமத்தில் நேற்று அதிகாலை முதலை ஒன்று புகுந்தது. அங்கு உள்ள வாய்க்காலில் முதலை இறங்கியதை சிலர் பார்த்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கிராம பொது மக்கள், இளைஞர்கள் பலர் ஒன்று கூடி முதலையை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். முதலையை மடக்கி பிடித்து ஊர் கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் கட்டிப்போட்டு சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் இருந்து முதலையை மீட்டு சிதம்பரம் அடுத்த வக்காரமாரி நீர் தேக்கக் குளத்தில் விட்டனர். பிடிபட்ட முதலை 12 அடி நீளமும் 500 கிலோ எடையும் இருந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior